அஞ்சல் துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், வழக்கம் போல் தமிழகத்தில் எதிர்ப்பு குரல் கிளம்பியது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இப்போது தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.